Thursday, December 8, 2016

உயிர் மெய் - காட்சி எண் - 8, 8A

காட்சி எண் - 8
College Ground / Early Morning / Ext


பேஸ்கட் பால் கிரவுண்டில்
கார்த்திக் தன் தோழர்களோடு
விளையாடிக் கொண்டிருக்கிறான்.

கார்த்திக் :   ரவி எங்கடா?

நண்பன் :    இல்ல கார்த்திக் சொன்னா நீ
கோவிச்சுக்குவ
சடார் என அவனை முறைத்து

                                      கார்த்திக் :     எங்கடா அவன்?

நண்பன் :    மப்புபடிச்சி மண்டக் காஞ்சிப்
போய் கிடக்கிறான்....

கார்த்திக் :   என்னடா சொல்ற...

நண்பன்-2 : அதான்டா செல்வின்னு ஒரு பிகர் பின்னாடி சுத்திட்டு இருந்தான். சாக்லேட், ஐஸ் க்ரீம், பூவுன்னு அவளுக்கு வாங்கிக் கொடுத்தான் அவ இவனுக்கு மொத்தமா அல்வா குடுத்துட்டா..

நண்பன்-3 : அப்படி எல்லா இல்லடா  அவ
ஓகே தான் அவங்க அப்பா,
அம்மா ஒத்துக்கல....

கார்த்திக் :   இப்ப எங்க இருக்கான்....


------Swiss Pan-----


காட்சி எண் – 8A
College Ground / Morning / Ext


கார்த்திக்கின் வகுப்புத் தோழி ஷிவானி
தன் தோழிகளுடன்
பேசிக் கொண்டிருக்கிறாள்.

கார்த்திக் தன் தோழர்களுடன்
வருகிறான்...

ஷிவானியின் தோழிகளில்
ஒருத்தியைப் பெயர் சொல்லி
அழைக்கிறான்...

கார்த்திக் :   ஏய் இங்க செல்வி யாருடி...

ஷிவானி :   கார்த்திக் மைண்ட் யுவர்
பிஸ்னஸ்....

கார்த்திக் :   சேம் டூ யூ... செல்வி யாரு....

அவள் பயந்தபடி வர.....

கையை நீட்டி நண்பனிடமிருந்த
கடிதத்தை வாங்கி கிழித்து
அவள் முகத்தில் எறிகிறான்....

அனைவரும் அதிர...

கார்த்திக் :   காதலுக்காக எதை
வேண்டுமானாலும் விட்டுத் தரலாம் காதலையே விட்டுத் தரக்கூடாது....
அப்பா-அம்மா மிரட்டலுக்காக
இன்னைக்கு வேண்டாம்னு சொல்றவ காதலிக்கிறப்ப யோசிச்சியா
நீ மாட்டேன்னு சொன்னா உன் லைஃப்பும் ஸ்பாயிலாயிரும், இவன் லைஃப்பும் ஸ்பாயிலாயிரும்...
உன் கூட வாழ்க்கை நடத்த ஒரு 10,000 பத்தாதா. அதை இவன் சம்பாதிக்க மாட்டானா....

செல்வி ரியாக்ஷன்......

ஷிவானி ரியாக்ஷன்....

கார்த்திக் :   பின்ன... இங்கே பார் உங்க
காதலுக்காக யார் எதிர்த்து நின்றாலும் இந்த காலேஜ் முழுக்க உங்களுக்கு சப்போட் பண்ணும்.

செல்வி தயங்குதல்.....

ஷிவானி :   அவளுக்குப் பிடிக்கலேன்னா
விட்டுற வேண்டியதுதான

என்று கூற....

கார்த்திக் இருவரையும் பார்த்து

கார்த்திக் :   பிடிக்கலையா.... என்ன பிடிக்கலையா

என்று கேட்க....

காதலன் காதலி அங்கேயே
இணைகிறார்கள்.....
ஷிவானியைக் கேலியாகப்
பார்த்தவாறே வெற்றிப்
புன்னகையுடன் திரும்புகிறான்
கார்த்திக்....

கார்த்திக் :   யாருக்காகவும் எதுக்காகவும் காதலை மட்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது"

என்று கார்த்திக் கூற...

ஷிவானி அவனையே
முறைக்கிறாள்.

ஷிவானியையே பார்த்துக்கொண்டு
வந்த கார்த்திக் எதிரே வந்த
ப்ரியா மேல் மோதுகிறான்

புத்தகங்கள் சிதறுகின்றன

கார்த்திக் ப்ரியா
இருவரின் பார்வைகள்





 ---- Cut to -----

Saturday, December 3, 2016

திரைக்கதை உத்திகள் 1. திரைக்கதையின் படிநிலைகள்

திரைக்கதை உத்திகள் 1. திரைக்கதையின் படிநிலைகள்

ஒரு திரைக்கதையினை எழுத என்னென்ன படிநிலைகள் உள்ளன, அல்லது இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்..

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகள் பொதுவானவைதான்.. இவற்றில் மாற்றங்களும் இருக்கலாம்.

பொதுவாக


திரைக்கதையின் படிநிலைகள்

1. கான்செப்ட் அல்லது கதைக்கரு
2. ஒருவரிக் கதை
3. ஒரு பக்கக் கதை
4. கதை
5. திரைக்கதை ஒருவரி6. திரைக்கதை
7. படப்பிடிப்புக் கதை

என்றவாறு அமைவது நல்லது..

இவை ஒவ்வொன்றையும் நாம் தனித்தனியாகப் பார்க்கலாம்.

உயிர்மெய் - காட்சி எண் - 7

காட்சி எண் - 7
Nandhini House / Day / Int

சிவாவும், விவேக்கும் கோட்
இல்லாமல் இருக்கிறார்கள்

இப்போது சிவாவிற்குத் தன்
வருங்கால மனைவியை
அறிமுகப்படுத்துகிறான் விவேக்...

இருவரும் வணக்கம்
சொல்லி கொள்கிறார்கள்

சிவா விவேக் தேவதர்ஷினி
மூவரும் பேசிக் கொண்டு
இருக்கிறார்கள்

அப்போது தோழிகளுடன்
அவர்களுக்குக் கூல் டிரிங்க்ஸ்
கொண்டு வருகிறாள் நந்தினி...

சேலையில் ஒரு தேவதை
போல இருக்கிறாள்...

அவளையே வைத்த கண்
வாங்காமல் பார்க்கிறான் சிவா....

நந்தினியும் சிவாவைப்
பார்த்து வியக்கிறாள்...

சிவாவிற்கு நந்தினியை
அறிமுகப்படுத்துகிறான் விவேக்....

விவேக் :    சிவா இவதான் என்னோட ஒரே மச்சினி....
ஒரு ஹாய் மட்டும் சொல்லிக்க

                                        சிவா :        ஹாய்

என்கிறான்

நந்தினி வெட்கத்துடன்
புன்னகைக்கிறாள்

விவேக் நந்தினியைப் பார்த்து

விவேக் :    இவன் என் பிரெண்ட் சிவா...
நீ ஒரு ஹலோ சொல்லிக்க

என்கிறான்....

நந்தினி :     ஹலோ..

என்று சொல்லி வெட்கப்பட

விவேக் :    ஏய் நீ அதிகமா ரியக்ஷன்
காட்டுற..... கிளம்பு  கிளம்பு...

நந்தினி :     ஆமாம் உங்க பிரெண்டை
சைட் அடிக்கவா வந்தேன்......
ரொம்ப டென்ஷனா இருப்பீங்கன்னு கூல் டிரிங்ஸ் கொண்டுவந்தேன் எடுத்துக்குங்க...

அனைவரும் கூல் டிரிங்ஸ்
எடுக்கிறார்கள்...

அதிலும் நந்தினி ஸ்டிராவை
முடிந்து வைத்திருக்கிறாள்...
மாப்பிள்ளையை மாட்டி விட....

தவறுதலாக சிவா அதனை
எடுத்து விடுகிறான்...

அவள் சைகைகள் செய்கிறாள்....

அவளின் சைகைகளை அவன்
வினோதமாகப் பார்த்து
ரசிக்கிறான்...

ஆனால் புரிந்து கொள்ளவில்லை....

ஸ்டிராவை வைத்து இழுக்க
கூல் டிரிங்க் வராமல்
அவன் முழிப்பது

ஸ்டிராவை வெளியே எடுக்க
அது முடிந்திருக்கிறது...

விவேக் அதைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறான்....

விவேக் :    இப்பவும் நீ மாட்டிக்கிட்டியா

என்று ஒரு தத்துவம் கூறுதல் ...

சொல்லி முடிக்கும் போது
பக்கத்து டேபிளில்....

நந்தினி கூல் டிரிங் தட்டி விட்டு ...
மொத்தமாக விவேக் மேல் விழுதல்...

அனைவரும் சிரிக்கிறார்கள்...

விவேக் ரியாக்ஷன் ....

விவேக் :    ம், மாப்பிள்ளையா புரமோஷன்
கொடுத்தாலும் காமெடியன்
காமெடியன் தானாடா டேய்

என்று புலம்பியபடி
நந்தினியைப் பார்க்க.....

நந்தினி :     ஐயோ மாமா நான் இல்லை.....

என்று கூறியபடி
மாடிக்கு ஓடுதல்.....

சிவா அவளையே பார்த்துக்
கொண்டிருக்கிறான்...

மாடி வரை ஓடியவள்
அங்கிருந்து ஒரே முறை
சிவாவைத் திரும்பிப் பார்க்கிறாள்.....

இருவரையும் விவேக்
பார்த்து விடுகிறான்.

மீண்டும் புலம்பல்

விவேக் :    எனக்கிருந்ததே ஒண்ணே
ஒண்ணு கண்ணே
கண்ணுன்னு
ஒரு மச்சினி.....அவளையும்
கரெக்ட் பண்ணிட்டானா?.....
டேய் பாவிகளா?






----- Cut to -----